கடத்தூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோர்
11/13/2019 7:30:02 AM
கடத்தூர், நவ.13: கடத்தூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோராக நடந்தது. கடத்தூர் பகுதியில் ேநற்று 4 கழுதைகளை ஓட்டிக்கொண்டு வந்து ஒருவர் பால் விற்பனையில் ஈடுபட்டார். கழுதை பாலை கறந்து கூவி கூவி விற்பனை செய்தார். அதனை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி குடித்தனர். கழுதை பால் குடித்தால் பல்வேறு நோய்கள் குணமாகும் என்பதால் வாங்கி பருகுவதில் ஆர்வம் காட்டினர். இதுகுறித்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவர் கூறுகையில், கழுதைப் பால் பல்வேறு மருத்துவ குணம் கொண்டது.
இதை குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, விஷக்கடி, வெட்டை சூடு உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும். சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கடை அளவு போதுமானது. பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். பல்வேறு கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறோம். 10 மில்லி அளவுக்கு ஒரு சங்கடை ₹50க்கும், 50மில்லி ₹200க்கும், 1லிட்டர் ₹4ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
மேலும் செய்திகள்
இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்
போச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்
சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!