கபிஸ்தலம் அம்மன் நகர் சாலை சீரமைக்கப்படுமா?
11/13/2019 7:07:30 AM
பாபநாசம், நவ. 13: கபிஸ்தலம் அருகே உள்ள சேதமடைந்து காணப்படும் அம்மன் நகர் பகுதி சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் வளர்ந்து வரும் ஊராகும். இந்த ஊரில் கபிஸ்தலம் சாலையில் உள்ள அம்மன் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலைகள் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாவதால் குண்டும், குழியுமாக வாகன போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.மழை நாட்களில் குண்டும், குழியுமான இந்த சாலையில் மழைநீர் தேங்கி தொற்று வியாதிகள் பரவும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அம்மன் நகரிலுள்ள சாலைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
டெல்டா பகுதியை தேசிய பேரிடராக அறிவித்து
திருநாகேஸ்வரத்தில் தகராறு மளிகை கடை கண்ணாடி உடைப்பு 2 பேர் கைது: 2 பேருக்கு வலை
சேதுபாவாசத்திரம் பகுதியில் தைப்பூசத்திற்கு மாறிய மாட்டுப்பொங்கல்
அய்யம்பேட்டையில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்
10.12ம் வகுப்புகளுக்கு 19ம்தேதி திறப்பு விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் கண்காணிப்பு அலுவலர் உறுதி
ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்