ஆலந்தூர் மண்டலத்தில் பாதாள சாக்கடை அடிக்கடி உடைப்பு
11/13/2019 12:02:58 AM
* தரமற்ற பைப்புகளே காரணம் * பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 12 மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் இதற்கான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடுகின்றன.இந்நிலையில், ஆதம்பாக்கம் கருணீகர் தெரு வழியாகச் செல்லும் பாதாள சாக்கடை குழாயில், கடந்த சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடி துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து, மண்டல கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக, 300 கடைகளில் பல கடைகளை வியாபாரிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை பள்ளத்தை தோண்டுவதும் மூடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. தரமற்ற குழாய்கள் பாதிக்கப்படுவதால் இதுபோன்று அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண பகுதி முழுவதும் தரமான பைப்புகள் அமைக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்பது அப்பகுதி வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகள்
வாய்த்தகராறில் விபரீதம் வடமாநில வாலிபர் கொலை: நண்பன் கைது
மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
கத்தி முனையில் மாமூல் வசூல் உதவி ஆய்வாளர் மகன் கைது
வங்கியில் தீ விபத்து
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை கணவன், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
தாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!