திருவில்லிபுத்தூர் அருகே குடிமராமத்து நடந்த கண்மாயில் சீரமைக்கப்படாத மடைப்பகுதி
11/12/2019 8:14:25 AM
திருவில்லிபுத்தூர், நவ. 12: திருவில்லிபுத்தூர் அருகே, குடிமராமத்து நடந்த கண்மாயில் மடைப்பகுதியை சீரமைக்காததால், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே வலையன்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த மழையால் கண்மாயில் நீர் நிரம்பியுள்ளது. இந்த கண்மாயில் சமீபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி மேற்கொண்டனர். ஆனால், மடைப்பகுதியை சீரமைக்கவில்லை. இதனால், மடை ஷட்டர் பகுதியில் உள்ள துளைகள் வழியாக தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால், கண்மாய் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வலையன்குளம் கண்மாயில் மடைப்பகுதியை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரோட்டில் கிடந்த பணம் ஒப்படைப்பு
ராஜபாளையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி சமையல் போராட்டம்
தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சரிந்து விழும் நிலையில் அச்சுறுத்தும் ‘கூரைசெட்’ அகற்ற கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 மினி கிளினிக் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
சாத்தூரில் சமத்துவ பொங்கல் விழா
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்