விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய விவசாயி கைது
11/12/2019 6:13:51 AM
மயிலாடுதுறை, நவ. 12: மயிலாடுதுறை அருகே விஏஓவை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் போலீஸ் சரகம் தொழுதாலங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன்கமலநாதன். இவர் மூவலூர் விஏஓவாக பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் விஏஓ அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, மூவலூரை சேர்ந்த திருநாவுக்கரசு (44) என்பவர், எனது நிலத்திற்கான பயிர் காப்பீட்டுத்தொகை யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டுள்ளார்.திருநாவுக்கரசு நிலத்தை தனியாரிடம் அடகு வைத்துள்ளார். அதனால் நிலம் அடகு பிடித்தவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விஏஓ தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி , விஏஓ வை தரக்குறைவாக பேசி பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளார்.இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விவசாயி திருநாவுக்கரசை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதன்மையாக விளங்குகிறது முதல்வர் நாராயணசாமி பெருமிதம்
தமிழ் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள்’
எஸ்சி, எஸ்டி மாணவர்களை போல் எம்பிசி, ஓபிசி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம்
புதுச்சேரியில் புதிதாக 34 பேருக்கு கொரோனா
என்எல்சியில் அப்ரண்டீஸ் முடித்தவர்கள் வேலை கேட்டு போராட்டம்
போக்சோவில் வாலிபர் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்