வியாபாரியை தாக்கிய பெண் கைது
11/12/2019 6:11:26 AM
சேத்தியாத்தோப்பு, நவ. 12: சேத்தியாத்தோப்பு அருகே பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மைனர் (40). இவர் மாடுகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மாடு வாங்கி விற்ற பணத்தை கொடுப்பதற்காக பண்ணப்பட்டு கிராமத்தில் உள்ள காந்தி சிலை அருகே பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜோசப் மகன் ஜோதிபாசு (45), அவரது மனைவி மேரி (28) ஆகியோர் அவரை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் மைனர்வைத்திருந்த ரூ.70.000 பணத்தை ஜோதிபாசு மற்றும் அவரது மனைவி மேரியும் பறித்து சென்றனர். இதுகுறித்து ஜோதிபாசு ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் அபுஇப்ராஹிம் வழக்கு பதிவு செய்து ஜோதிபாசு மனைவி மேரியை கைது செய்தார். ஜோதிபாசுவை தேடிவருகிறார்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
பதுக்கி வைத்து பெட்ரோல் விற்பனை: 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!