அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு தேசிய அளவிலான கண்காட்சிக்கு தேர்வு
11/12/2019 5:56:57 AM
புதுக்கோட்டை, நவ.12: வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவன் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெய்யை சுத்தப்படுத்த மாதிரி கப்பல் கண்டுபிடிப்பு. இது மாநில அளவில் நடந்த போட்டியில் முதல்பரிசு பெற்று, தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தேர்வாகி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் செந்தில்அரசு(13) என்பவர் அப்பள்ளி அறிவியல் ஆசிரியர் சந்திரபோஸ் வழிகாட்டுதல் படி, கடலில் மிதக்கும் கச்சாஎண்ணெய்யை கடலில் இருந்து எடுக்க புதியதாக ஒரு கருவி கண்டுபிடிக்க திட்டமிட்டு அதன்படி, கப்பல் மூலம் கடலில் மிதக்கும் கச்சா எண்ணெயை எடுக்க கருவி உருவாக்கியுள்ளார்.தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் கரூரில் நடந்த 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில், செந்தில்அரசு கண்டுபிடித்த கப்பல் முதல் பரிசு பெற்றது. மேலும், தேசிய அளவில் நடைபெறவுள்ள கண்காட்சிக்கு தேர்வாகி உள்ளது. இதற்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் மாணவன் செந்தில்அரசை பாராட்டினர்.
மேலும் செய்திகள்
கனமழையால் வைக்கோல் ஊறி வீணாகியது புதுகையில் கால்நடை தீவன பற்றாக்குறை அபாயம்
அறந்தாங்கி பகுதியில் மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் கேட்டு மறியல் எம்எல்ஏ தலைமையில் திரண்டனர்
மீமிசல் அருகே பைக்குகள் மோதல் 2 பேர் பரிதாப சாவு
மது பதுக்கி விற்ற 11 பேர் கைது
விராலிமலை பகுதியில் பயிர் சேதம் குறித்து வேளாண் அதிகாரி ஆய்வு
மு.க.ஸ்டாலின் வருகையால் விராலிமலை விழாக்கோலம்
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!