சீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பேருந்து இயக்க கோரிக்கை
11/12/2019 5:55:12 AM
சீர்காழி, நவ.12:சீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேசனுக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லை. அதனால் ரயில் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல ஆட்டோ கார் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
முக்கியமாக ரயில் வரும், புறப்படும் நேரங்களில் சீர்காழி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் வசதி வேண்டும் என்று ரயில் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சீர்காழில் இருந்து சிதம்பரம் வரை சென்று கொண்டிருந்த நகர பேருந்துகள் இயக்காமல் முடக்கப்பட்டுள்ளது சீர்காழியிலிருந்து சிதம்பரம் வரை நகர பேருந்தை இயக்கி அந்த பேருந்து ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பைபாஸ் வழியாக சிதம்பரம் வரை சென்றால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அல்லது சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே ஸ்டேஷன் வரை பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வேதாரண்யம் பகுதியில் புயலுக்கு தப்பிய சம்பா பயிர் கனமழைக்கு அழுகி சேதம்
வேதாரண்யத்தில்
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி
அழுகிய பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 விவசாயிகள் கைது
கீழ்வேளூர் பகுதியில் நிவாரணம் கேட்டு நடந்த மறியல் போராட்டத்தில் 300 பேர் கைது
அரசு உத்தரவையொட்டி இன்று திறப்பு மாணவர்கள் வருகைக்காக பொலிவு பெறும் பள்ளிகள்
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!!