சீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு பேருந்து இயக்க கோரிக்கை
11/12/2019 5:55:12 AM
சீர்காழி, நவ.12:சீர்காழி புதிய பஸ் நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேசனுக்கு பேருந்து இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லை. அதனால் ரயில் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல ஆட்டோ கார் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
முக்கியமாக ரயில் வரும், புறப்படும் நேரங்களில் சீர்காழி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஸ் வசதி வேண்டும் என்று ரயில் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சீர்காழில் இருந்து சிதம்பரம் வரை சென்று கொண்டிருந்த நகர பேருந்துகள் இயக்காமல் முடக்கப்பட்டுள்ளது சீர்காழியிலிருந்து சிதம்பரம் வரை நகர பேருந்தை இயக்கி அந்த பேருந்து ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பைபாஸ் வழியாக சிதம்பரம் வரை சென்றால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அல்லது சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக ரயில்வே ஸ்டேஷன் வரை பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
கீழ்வேளூர் ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
காரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா
கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்
காரைக்காலுக்கு 28ம் தேதி அமித்ஷா வருகை
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!