பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
11/8/2019 5:56:51 AM
திருவையாறு, நவ. 8: திருவையாறு அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவையாறு அருகே வசிப்பவர் சுகன்யா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவையாறில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை காணவில்லை.இதுகுறித்து திருவையாறு போலீசில் சுகன்யாவின் தந்தை புகார் செய்தார். இந்நிலையில் திருவையாறு அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பள்ளி மாணவியை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் அதே பகுதியில் குடியிருந்து வரும் திருமணமான ஒரு வாலிபருடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், சமீபத்தில் தஞ்சாவூரில் வேலை பார்க்கும் கம்பெனி அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அவருடன் தங்கி குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.மேலும் தன்னை காணாமல் பெற்றோர் தேடுவதை அறிந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறினார். இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்
பொதுமக்கள் வலியுறுத்தல் தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு
திட்டை முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்
கலெக்டரிடம் கிராம மக்கள் மனு மணல் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் திருச்சி சிறையில் அடைப்பு
தஞ்சையில் மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்