கடலுக்கு செல்ல வேண்டாம் ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை
11/8/2019 5:56:39 AM
அதிராம்பட்டினம், நவ. 8:
அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராமங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறையினர் ஒலி பெருக்கி மூலம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.புல் புல் புயல் உருவாகியிருப்பதால் கடலில் பலத்த காற்றும் கடல் சீற்றமும் ஏற்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரை பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கிதெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில உள்ள மீனவ கிராமங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை இணைந்து ஒலிபெருக்கி மூலம் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் அதிவேக காற்றும், கடல் சீற்றமும் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த அறிவிப்பை மீனவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் 1,000 பைபர் படகுகள் மற்றும் இதன்மூலம் மீன்பிடி தொழில் செய்யும் 3000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மேலும் செய்திகள்
தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்
பொதுமக்கள் வலியுறுத்தல் தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு
திட்டை முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்
கலெக்டரிடம் கிராம மக்கள் மனு மணல் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் திருச்சி சிறையில் அடைப்பு
தஞ்சையில் மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்