பழங்குடியினர் மக்களை அச்சுறுத்தும் ரத்தசோகை
11/8/2019 5:43:36 AM
பந்தலூர், நவ. 8:பந்தலூர் அருகே பிதர்காடு ஓடோடும் வயல் பந்தகாப்பு ஆதிவாசி காலனியில் வசிக்கும் மக்கள் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஆதிவாசி காலனியில் ஆதிவாசி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்தசோகை எனப்படும் அனிமியா குறைபாடு நோய் தாக்கியுள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.
போதிய இரும்பு சத்து மாத்திரைகள், ரத்தசோகையை போக்கும் உணவுகள் உட்கொள்ளாமல் அவர்கள் சோம்பலுடனே காணப்படுகின்றனர். இப்பகுதியில் கிராம சுகாதார செவிலியர்கள் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ ஆலோசனைகள் வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே சுகாதாரத்துறையினர் சம்மந்தப்பட்ட ஆதிவாசி கிராமங்களுக்கு சென்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மனித நேய வாரவிழா
காரமடை, முள்ளி வழித்தடத்தில் கனரக வாகனங்களை இயக்க வலியுறுத்தல்
உறைபனியால் குன்னூரில் கடும் குளிர்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்