லாரி மோதி தம்பதி படுகாயம் ஆம்புலன்ஸ் வர தாமதம் பொதுமக்கள் சாலை மறியல்
11/8/2019 12:02:37 AM
புழல்: பைக்கில் சென்ற தம்பதி மீது லாரி மோதியதில் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (40), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் நேற்று காரணோடை அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டு சாலை அருகே பைக்கில் சென்றபோது, அவ்வழியே வந்த லாரி, இவர்களின் பைக் மீது வேகமாக மோதியது.
இதில், பைக்கில் வந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தினர். பின்னர், தாமதமாக வந்த ஆம்புலன்சில் படுகாயமடைந்த கணவன், மனைவியை ஏற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
போரூர் சுங்கச்சாவடி மீது தாக்குதல் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 6 பேர் கைது
ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவன் கைது
புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
திருமலாவின் ஒயிட் கோல்ட் பால் அறிமுகம்
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் சிக்கிய பூனை மீட்பு
தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறப்பு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்