நாகப்பாம்புக்கு அறுவை சிகிச்சை
11/7/2019 1:44:05 AM
திருப்பரங்குன்றம், நவ. 7: திருப்பரங்குன்றம் அருகில் காயத்துடன் பிடிபட்ட நாகப்பாம்பு அறுவை சிகிச்சைக்கு பின், வனப்பகுதியில் விடப்பட்டது.திருப்பரங்குன்றம் அருகில் உள்ள விளாச்சேரி முனியாண்டிபுரத்தில் குடியிருப்பு பகுதி அருகில், சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க நான்கு அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று உடலில் காயத்துடன் நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் திருநகர் ஊர்வனம் அமைப்பின் உதவியோடு, அடிபட்ட பாம்பை பத்திரமாக மீட்டு, மதுரை தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் அடிபட்ட பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். இரண்டு மணி நேரம் கழித்து அந்த பாம்பை வனத்துறையினர் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.
மேலும் செய்திகள்
சாலை அமைக்கும் போது தனியாக நடைபாதை வசதி: அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவு
6 மாவட்டங்களில் 30 பேருக்கு கொரோனா
காதல் மனைவியை ஆஜர்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் வழக்கில் போலீசாருக்கு உத்தரவு
அதிமுக ஆட்சி அமைக்குமா என இப்போது கூறமுடியாது
விடுதிகளில் சமையலர் காலிப்பணியிட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் வாக்காளர் தினவிழாவில் கலெக்டர் பேச்சு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்