திருவாரூரில் நாளை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
11/7/2019 12:28:54 AM
திருவாரூர், நவ.7: திருவாரூரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நாளை (8ம்தேதி) நடைபெறுகிறது. திருவாரூர் ஆரூரான் திருமண மண்டபத்தில் மாலை 4 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் அருணாசலம் தலைமை வைக்கிறார். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்பி கோபால் முன்னிலை வகிக்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் நூறு சதவிகித வெற்றியை பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் சாய்ந்து, நீரில் மூழ்கிய 90 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்
கலெக்டர் ஆய்வு சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள்
தொழிலாளர் நல உதவி ஆணையர் தகவல் போகி பண்டிகையான இன்று பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்கவும்
பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டுகோள்
பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் கொத்து விற்பனை விறுவிறுப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்