மயிலாடுதுறை அருகே சம்பவம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே
11/7/2019 12:28:04 AM
சீர்காழி, நவ.7: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தூர்வாரப்பட்ட முடவன் வாய்க்காலில் மீண்டும் ஆகாயத்தாமரை மண்டியுள்ளதால் அதனை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் முடவன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகாலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 350 ஏக்கரில் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்க்கால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரை மண்டிக்கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வது தடைபடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதால் தண்ணீரை கால்நடைகளுக்குகூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முடவன் வாய்க்காலில் பல்வேறு பகுதியிலிருந்து கழிவுகள் தண்ணீரில் அடித்து வரும்போது ஆகாயத்தாமரைகளால் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் விவசாயிகள் நலன்கருதி முடவன் வாய்க்காலில் படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காவிரி டெல்டாவை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்ககோரி 9 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்
155 பேர் கைது திருநள்ளாறில் 2 பேருக்கு கொரோனா
கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை
காரைக்கால் மருத்துவர்கள் கருத்து வேதாமிர்த ஏரியில் 25,000 மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்டத்தில் 1.61 லட்சம் வாக்காளர்கள்
சம்பா அறுவடை தொடக்கம் போதிய மகசூல் கிடைக்காததால் கீழ்வேளூர் விவசாயிகள் வேதனை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!