மதிப்பு கூட்டு பொருளாக அறிவிக்கக்கோரி வெங்காய மாலை அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
11/6/2019 5:36:24 AM
செய்யாறு, நவ.6: வெங்காயத்தை மதிப்பு கூட்டு பொருளாக அறிவிக்கக்கோரி செய்யாறில் விவசாயிகள் வெங்காய மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு பிடிஓ அலுவலக அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அலுவலகம் வெளியே விவசாயிகள் வெங்காயத்தை மாலையாக அணிந்து, திருவள்ளுவர் படத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘வெங்காய விலையை நிலைப்படுத்த வேண்டும். உற்பத்தி பெருக்க விதை, நாற்று மற்றும் கடனுதவி வழங்க வேண்டும். அறுவடைக்கு பின் சேமிக்க கிடங்கு அமைத்து தரவேண்டும். வெங்காயத்தை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும் செய்திகள்
காவல் நிலையத்தில் டிஎஸ்பி விசாரணை சேத்துப்பட்டு மக்கள் மகிழ்ச்சி கடத்தல் மணலை போலீஸ் விற்ற புகார்
பைக்குகள் மோதி பெயின்டர் பலி 3 பேர் படுகாயம் கீழ்பென்னாத்தூரில்
ஏரி மண் கடத்தியவர் கைது
கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி திருவண்ணாமலையில் நடந்தது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்
தண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்