கரும்பு நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் மருந்து பாட்டிலுடன் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்போம்
11/6/2019 5:35:56 AM
திருவண்ணாமலை, நவ.6: தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு நிலுவை தொகை உடனடியாக வழங்காவிட்டால், மருந்து பாட்டிலுடன் கூட்டத்தில் பங்கேற்போம் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ள 44 பொருட்களுக்கு தடைவிதித்து, இதனை கைவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். கலெக்டர் 10 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் இதுவரை வழங்கவில்லை.
எனவே, மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முன்பாக நிலுவை தொகையை வழங்காவிட்டால், விவசாயிகள் அனைவரும் மருந்து பாட்டில்களுடன் வந்து பங்கேற்போம். மேலும், அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பூக்கள் வரத்து அதிகம் உள்ளதால், மாவட்டத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு அதிமுகவினரை கண்டித்து சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு
2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார் குடியரசு தின விழா கொண்டாட்டம்
பைக் மீது வேன் மோதி தந்தை பலி மகன் படுகாயம்
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திமுக சார்பில்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில்
பெட்டியில் போடும் மனுக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை குறைதீர்வு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!