புழுதி பறக்கும் தார் சாலையால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
11/5/2019 7:07:09 AM
உளுந்தூர்பேட்டை, நவ. 5: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நகர் ரயில்வே மேம்பாலம் வரையில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் தார் சாலை போடப்பட்டது. இந்த தார் சாலை போடப்பட்டு சில மாதங்களிலேயே விருத்தாசலம் சாலை சந்திப்பில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை வரையில் உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக ஆனதுடன், புழுதி பறக்கும் சாலையாக மாறி உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியபோது, நெடுஞ்சாலை துறையின் சார்பில் இந்த சாலை போடப்பட்டு ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் குண்டும், குழியுமாக புழுதி பறக்கும் சாலையாக மாறியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது காற்றில் புழுதி அடிப்பதால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரமற்ற சாலையின் மேல் மீண்டும் தார் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு காரில் சடலமாக கிடந்த கோவை வாலிபர்
டிராக்டர் கவிழ்ந்து மூதாட்டி பலி
செங்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கி வந்த குடிநீர் கம்பெனிக்கு சீல்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்