வேளாங்கண்ணியில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்க விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்
11/1/2019 12:29:22 AM
நாகை, நவ.1: வேளாங்கண்ணியில் இருந்து தென்மாவட்டங்களை இணைக்க விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாகூர் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்பாளர்கள் நல சங்க கூட்டம் நாகூரில் நடந்தது.
ராஜமாணிக்கம் அமைப்பாளராக செயல்பட்டு பொறுப்பாளர்களை தேர்வு செய்தார். இதில் தலைவராக முகம்மதுதாஹா, செயலாளராக சித்திக், பொருளாளராக மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், அதிகாலையில் விரைவு ரயில் காரைக்கால் அல்லது நாகூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு செல்ல வேண்டும். மறு மார்க்கத்தில் மாலை திருச்சியில் இருந்து நாகூர் அல்லது காரைக்காலுக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து தினசரி விரைவு ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரைக்கு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இயக்க வேண்டும்.
வேளாங்கண்ணி அல்லது காரைக்காலில் இருந்து தினசரி பெங்களூர், யஸ்வந்த்பூர் அல்லது ஹூப்ளிக்கு இயக்க வேண்டும். இந்த ரயில் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட வேண்டும். காலை 6 மணிக்கு மேல் தஞ்சைக்கு நாகையில் இருந்து ரயில்கள் இல்லை. எனவே நாகையில் இருந்து காலை 9 மணிக்கும், மதியம் 2 மணிக்கும் தஞ்சைக்கு ரயில் இயக்க வேண்டும். அதே போல் தஞ்சையில் இருந்து மதியம் காரைக்காலுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கிலோ மீட்டர் வரையிலான அகல ரயில் பாதை பணியை தொடங்க வேண்டும். தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை மின்மயமாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
சுவர் விளம்பரம், கொடி கம்பம் அகற்றாத கட்சிகள் மீது வழக்கு
நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு ஆணையரிடம் உரிமையாளர்கள் வாக்குவாதம்
பேருந்து மோதி முதியவர் பலி
கோடியக்காட்டில் குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் மறியல் போராட்டம்
வங்கிகள் தனியார் மயம் கண்டித்து ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைப்பு மதிய உணவு திட்டம் மீண்டும் துவக்கம்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்