வெங்கடேஸ்வரா நகரில் சாக்கடை வடிகால் பணி பாதியில் நின்றதால் கழிவு நீர் தேக்கம்
11/1/2019 12:26:59 AM
கரூர், நவ. 1: கரூர் வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதியில் சாக்கடை வடிகால் பாதியில் நிறுத்தப்பட்டதால் கழிவு நீர் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துள்ளதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் எம்ஜிஆர் நகர்ப்பகுதிகளில் இருந்து வெங்கடேஸ்வரா நகர்ப்பகுதிகள் மற்றும் சவுரிமுடித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாக்கடை வடிகால்களை ஒன்றாக இணைக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் இருந்து அரைகுறையாக கட்டப்பட்டுள்ள சாக்கடை வடிகால் வெளியேற்றப்பட்டு வரும் கழிவுகள் அனைத்தும் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் சாலையில் கலந்து அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்கிறது. கழிவு நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்வதால் கடும் துர்நாற்றம் உட்பட தொற்று நோய் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பணியை முழுமையாக முடித்து, கழிவு நீர் வெளியேறாத வகையில் பணிகளை துவங்க வேண்டும் என இந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், செவி சாய்க்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த கழிவு நீர் வெளியேறுவதால் பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர். அசாதாரணமான நிலையை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, கழிவு நீர் வெளியேறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம்
திரளான பக்தர்கள் தரிசனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68வது பிறந்த நாள் கொண்டாட்டம்
வீட்டின் அருகே விளையாடிய சிறுமி நாய் கடித்து படுகாயம் மருத்துவமனையில் அனுமதி
தீவிர வாகன சோதனை தனி நபரின் நன்னடத்தை பாதிக்கும் வகையில்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் 91 பேர் கரூர் வருகை
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்