விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி
10/25/2019 3:34:17 AM
பண்ருட்டி, அக். 25: பண்ருட்டி தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் அரசு பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எஸ்எஸ் மாணவர்கள் மூலம் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி, பொதுமக்களிடையே பேசும்போது, தரமான நிறுவன பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகளை வாங்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெடிகளை வெடிக்க நீண்ட வத்திகளை பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் இல்லாமல் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலம் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகன்குமார் செய்து இருந்தார்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50வது நாளாக தொடர் போராட்டம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மருத்துவமனை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது
வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்
நடராஜர் கோயிலில் தேசிய கொடியேற்றம்
வேப்பூர் அருகே சோகம் இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!