ஊரணிபுரத்தில் சிமென்ட் காரை பெயர்ந்து மின்கம்பம் விழும் அபாயம் பொதுமக்கள் அச்சம்
10/24/2019 5:38:55 AM
ஒரத்தநாடு, அக். 24: ஊரணிபுரத்தில் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊரணிபுரத்தில் பட்டுக்கோட்டையில் இருந்து கந்தர்வக்கோட்டை செல்லும் மெயின்ரோட்டில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மினகம்பம் சேதமடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் தரப்பட்டுள்ளது. வேகமாக காற்று அடித்தால் கூட இந்த மின்கம்பம் உடைந்து கீழே சாய்ந்து விடும். இந்த சாலை வழியாக ஏராளமானோர் தினம்தோறும் சென்று வருகின்றனர்.
அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டு ஊரணிபுரம் மின் உதவி பொறியாளரிடம் பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரத்தநாடு மின் செயற்பொறியாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!