ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயம்
10/23/2019 6:25:43 AM
திருப்புவனம், அக். 23: திருப்புவனம் அருகே, ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியத்தை சேர்ந்த ஊர்காவலன், திருப்புவனத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை மேலராங்கியத்தில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்புவனம் வந்து கொண்டிருந்தார். நைனார்பேட்டை ஊருணி அருகே, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் மேலராங்கியத்தை சேர்ந்த லலிதா, லட்சுமி, தனலெட்சுமி உட்பட 5 பேர் காயமடைந்தனர். 3 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இது குறித்து திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இன்று மின்தடை
கொரோனா தடுப்பு பிரிவு ஊழியர்கள் மீண்டும் பணி வழங்க கோரி மனு
சிவகங்கையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அடிக்கடி பழுதாகும் மின்வாரிய சர்வர் ஆன்லைனில் பணம் கட்ட முடியாமல் தவிப்பு
காளையார்கோவில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மானாமதுரையில் பாதாளச்சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்