சேலம் அருகே கன மழையால் தரைப்பாலம் மூழ்கியது
10/23/2019 6:10:07 AM
ஆட்டையாம்பட்டி, அக். 23: சேலம் அருகே கன மழையால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால்இ போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே இனாம்பைரோஜி வழியாக மின்னக்கல், வெண்ணந்தூர் மற்றும் ராசிபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலையில் மினி பஸ்கள் தவிர பள்ளி வேன்கள், லாரிகள் மற்றும் கார்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இடையில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் தண்ணீர் தரை பாலத்தை மூழ்கடித்து, 2 அடி உயரம் வரை சென்றது. நேற்று காலை முதலே இச்சாலையில் டூவீலர்கள் முதல் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர். இதில் மழையால் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால், மாணவர்களின் சிரமம் குறைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கன மழை பெய்தால், தண்ணீர் பாலத்தை மூழ்கடித்தப்படி செல்கிறது. இதை தவிர்க்க பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும். இது குறித்து தினகரனில் படத்துடன் செய்து வெளியிடப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.
எனவே, தரைப் பாலத்தை உயர்த்தி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகள்
வாழைத்தார் விலை வீழ்ச்சி
வருவாய்த்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
ஆத்தூர் மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பேற்பு
19,632 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி
பூங்கா கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளாக நிறுத்தம்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!