கெலமங்கலத்தில் நாளை தோல்நோய் சிறப்பு முகாம்
10/23/2019 6:04:39 AM
கிருஷ்ணகிரி, அக்.23: கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (24ம் தேதி) காலை 10 மணிக்கு தோல்நோய் மற்றும் தொழு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாமில் தோல்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை மற்றும் தொழு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு அறுவை சிகிச்சை, சிறப்பு காலணிகள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ₹1500 மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே, தொழு நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் மார்பளவு புகைப்படம்-5, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம் என முகாம் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
சைக்கிள் வழங்கும் விழா
கோயில் கும்பாபிஷேக விழா
ஆசிட் குடித்த தொழிலாளி சாவு
கோயில் கும்பாபிஷேக விழா
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!