நடுக்கடலில் மீனவர் மாயம்
10/22/2019 7:10:42 AM
காசிமேடு: ராயபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கொண்டலு (31) தலைமையில் 7 பேர், கடந்த 19ம் தேதி, காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா அருகே நேற்று முன்தினம் இரவு இவர்கள் மீன் பிடித்துவிட்டு, படகில் தூங்கினர். நேற்று காலை மீனவர்கள் எழுந்து பார்த்தபோது, ஆந்திர மாநிலம், பிரகாசம் ஜில்லா, சீராள தாலுகாவை சேர்ந்த மஸ்தான் (50) என்பவர் படகில் இருந்து மாயமானது தெரிந்தது. இந்நிலையில், மற்ற மீனவர்கள் நேற்று காசிமேடு கடற்கரைக்கு திரும்பினர். பின்னர், இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்திய கடலோர காவல் படையினர், மஸ்தானை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர், தூங்கும் போது கடலில் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
எஸ்ஆர்எம் கல்லூரி விடுதி அறையில் மருத்துவ மாணவி தற்கொலை
வேலைக்கு அழைப்பது போல் நடித்து 11 பேரின் செல்போன் அபேஸ்: 3 பேர் கைது
மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டில் ரூ.1.3 லட்சம் பறிமுதல்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிக்க 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம்: ஒரு மேஜையில் 3 பேருக்கு மட்டுமே அனுமதி
பொங்கலை முன்னிட்டு சென்னையில் கனரக, சரக்கு வாகனங்கள் நுழைய தடை: போக்குவரத்து போலீசார் உத்தரவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்