துறையூர் அருகே வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு
10/18/2019 2:50:14 AM
துறையூர், அக்.18: துறையூர் அருகே கொப்பம்பட்டியில் வீடு புகுந்து 12 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(42). இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை அம்பிகா ராசிபுரத்தில் உள்ள ஒரு மெட்டல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் செல்வராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு அதே ஊரில் வசிக்கும் தனது அக்கா ஜெயமணியை தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த செயின், வளையல், நெக்லஸ், கை செயின், மோதிரம் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுபற்றி செல்வராஜ் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் நீண்ட வரிசை சங்கிலியாண்டபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததால் பொதுமக்கள் மறியல்
திருச்சி பகுதியில் கஞ்சா விற்ற ரவுடி உட்பட 5 பேர் கைது
ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி
தடுத்து நிறுத்திய போலீஸ் லால்குடி அருகே நகர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் திறப்பு
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் பெற்றுத்தர எம்எல்ஏவிடம் விவசாயிகள் கோரிக்கை
கீரனூர் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் அத்யாவசிய பணிக்காக 4 கி.மீ., சுற்றி செல்லும் மக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்