ஜெருசலேம் புனித பயணம் செய்ய நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
10/18/2019 12:11:43 AM
ஊட்டி, அக்.18:நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அைனத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்துவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசு ஆணையிட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 0423-2440340 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்
மேலும் செய்திகள்
போக்குவரத்து, டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் நீலகிரியில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை
ரயில் நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
கக்குச்சி கிராம ஊராட்சிக்கு பரிசு
கேரட் கழுவும் இயந்திரங்கள் ஆய்வு
முதுமலையில் 5 மாநில புலிகள் காப்பக இயக்குனர்கள் ஆய்வு
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!