வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை
10/18/2019 12:05:37 AM
மொடக்குறிச்சி, அக்.18: ஈரோடு அடுத்த முள்ளாம்பரப்பு, முல்லை நகரை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவர், சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருசப்பன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கொல்கத்தா சென்றுவிட்டார். அவரது மனைவி காயத்ரி கடந்த 15ம் தேதி ஈரோடு மோசிக்கீரனார் வீதியிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கிரில்கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து காயத்ரி அளித்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கெட்டிசமுத்திரத்தில் குப்பை வண்டிகளை சிறை பிடித்த மக்கள்
19 பேருக்கு கொரோனா இரு பெண்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்
ரயில் நிலையத்தில் தொடர்ந்து 6 முறை ஒலித்த சைரனால் பரபரப்பு
ஈரோடு டிஆர்ஓ இடமாற்றம்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!