பள்ளி மாணவர்கள் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை
10/17/2019 6:28:00 AM
கும்பகோணம், அக். 17: தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டுமென தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவுரை வழங்கினார்.கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகுமார் தலைமை வகித்து பேசுகையில், பட்டாசுகளை வெடிக்கும்போது நீளமாக உள்ள ஊதுபத்தியை பயன்படுத்த வேண்டும். அதன்முன் 2 வாளிகளில் தண்ணீரும், மணல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பட்டாசுகளை வெடிக்கும்போது உடைகள் காற்றில் பறக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். சில்க் துணிகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.கூரை வீடுகள், மருத்துவமனை, பள்ளி கூடங்கள் இருந்தால் அதன் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. கட்டிடங்கள், போக்குவரத்து நெரிசலான சாலைகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சத்தத்தை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, சிறிய பட்டாசுகளை கையில் வைத்தும், ஏதேனும் பொருட்கள் மேல் வைத்தும் வெடிக்கக்கூடாது.பட்டாசுகளை வெடிக்கும்போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் உடனடியாக எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்
பொதுமக்கள் வலியுறுத்தல் தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு
திட்டை முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்
கலெக்டரிடம் கிராம மக்கள் மனு மணல் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் திருச்சி சிறையில் அடைப்பு
தஞ்சையில் மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்