தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ‘பர்மிட்‘ ரத்து
10/17/2019 3:28:45 AM
சேலம், அக். 17: சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில் தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர்.
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பதி, ராமேஸ்வரம், திருச்சூர், எர்ணாகுளம், குருவாயூர், திருவனந்தபுரத்திற்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரைவு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு டிக்கெட் கடந்த சில நாட்களுக்கு முன் முடிந்தது. விரைவு போக்குவரத்து கழகத்தில் இடம் கிடைக்காதவர்கள், ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம்னி பஸ்களில் முன்பதிவு டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்றால் அந்த பஸ்சின் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 ஆம்னி பஸ்கள் தினசரி பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த முன்பதிவு டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. அவ்வாறு விற்பது தெரிய வந்தால் அந்த பஸ்சின் பர்மிட் ரத்து செய்யப்படும்,’’ என்றனர்.
மேலும் செய்திகள்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்
மேட்டூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்
கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் ரத்து
வாழப்பாடி அருகே பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை
குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ₹15.50 லட்சம் மோசடி கலெக்டரிடம் புகார் மனு
இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிசேகம் முதல்வர் பங்கேற்பு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்