வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சாலையோர மரங்களில் மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்படுவதால் மக்கள் அச்சம்நடவடிக்கை எடுக்க கோரிக்கை
10/16/2019 5:36:53 AM
வலங்கைமான், அக்.16: வலங்கைமான் பேரூராட்சிப்பகுதியில் கடைத்தெரு, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றது. அதே போல் சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இவைகளை சரி செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் வலங்கைமான் பேரூராட்சிப்பகுதியில் மணவெளித்தெரு சுடுகாடு வழிநடப்பு பகுதியில் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மும்முனை மின்சாரம் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த மின்கம்பிகள் மூலம் ரைஸ் மில், மரம் அறுக்கும் மில் மற்றும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்கின்றது. இவ்வழித்தடத்தில் பள்ளிக்கூடம் அருகே மின்கம்பிகள் மீது அடர்ந்த மரங்கள் உரசிக்கொண்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது.
மேலும் சில நேரங்களில் மின்கம்பிகளில் இருந்து தீப்பொறிகள் கொட்டுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே வசிக்கின்றனர். மேலும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது உயர்மின் அழுத்த மின்சாரம் வருமோ எனவும் அச்சமடைகின்றனர்.
எனவே வலங்கைமான் மின்சார வாரியம் மேலும் காலதாமதம் செய்யாமல் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் மின்கம்பிகளின் மீது அடர்ந்து காணப்படும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
திருத்துறைப்பூண்டி பூசலாங்குடி சிவன் கோயில் குளத்தில் ஆகாயதாமரை அகற்றம்
பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நீடாமங்கலம் அருகே அஞ்சல் துறையினரின் செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்கி வைப்பு
திமுக ஆட்சியில் நியமனம், அதிமுக ஆட்சியில் நீக்கம் மக்கள் நலப்பணியாளர் வேலை கானல் நீரானது
பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனுமில்லை குடியரசு தின சிறப்பு கூட்டம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்