அரசு அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
10/16/2019 2:35:14 AM
பண்ருட்டி, அக். 16: பண்ருட்டி அருகே கீழ்கவரப்பட்டு கிராமத்தில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது புதுவை மாநில மதுபாட்டில்கள் வீட்டின் பின்புறம் வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு மதுபாட்டில் விற்பனை செய்துகொண்டிருந்த பிரபாகரன்(28) என்பவரை கைது செய்தனர். இதேபோல் பண்ருட்டி ராஜாஜி சாலையில் ரங்கா பில்டிங் முன்பு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்வதாக தகவல் வந்ததின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் சென்று அங்கு மதுபாட்டில் வைத்திருந்த சொரத்தூரை சேர்ந்த அன்பழகன்(51) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
கன்னித்திருவிழா கோலாகலம் சிலைகளுடன் கிராம மக்கள் ஊர்வலம்
பேனர் வைப்பதில் தகராறு குறிஞ்சிப்பாடியில் பட்டதாரி வாலிபர் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை 7 பேர் கும்பலுக்கு வலை
மாஜி ராணுவ வீரர் பாம்பு கடித்து பலி
அண்ணாமலை பல்கலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் விடுதியில் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு
போலி பெயிண்ட் விற்பனை செஞ்சியில் கடை உரிமையாளர், விற்பனை முகவர் அதிரடி கைது
3 மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட தடுப்பணையில் உடைப்பு தண்ணீர் வெளியேற்றம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்