மக்கள் மகிழ்ச்சி பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800 மரக்கன்றுகள் நடும் விழா
10/15/2019 5:42:24 AM
பட்டுக்கோட்டை, அக். 15: கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி ஏற்பட்ட கஜா புயல் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையே புரட்டி போட்டது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது. பட்டுக்கோட்டை அடுத்த பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதையறிந்த பட்டுக்கோட்டை கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், அரசு பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்தனர். அப்போது தான் பள்ளியில் தண்ணீர் வசதி இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்தனர். அதைதொடர்ந்து ஒரு மாணவருக்கு ஒரு மரக்கன்று என்ற திட்ட துவக்க விழா, ஆழ்குழாய் கிணறு ஒப்படைக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் மாணவருக்கு ஒரு மரக்கன்று என்ற வீதம் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஆளுநர் மணிமாறன் ஆழ்குழாய் கிணற்றை (போர்வெல்) பள்ளிக்கு ஒப்படைத்தார். உதவி தலைமையாசிரியை கோமதி நன்றி கூறினார்.
விழாவில் பள்ளியில் பயிலும் 800 மாணவர்களுக்கும் வேம்பு, புங்கை, தேக்கு, ரோஸ்வுட் உள்பட 17 வகையான 800 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அந்த மரக்கன்றுகள் அனைத்தும் அந்த பள்ளி வளாகத்திலேயே நடப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த மரக்கன்றுகளை ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் படிக்கும் காலம் வரை தாங்களே தினசரி தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் முடிவு செய்து அதற்காக உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்
பொதுமக்கள் வலியுறுத்தல் தஞ்சை கல்லணை கால்வாயில் குப்பை தேக்கும் வலையை பராமரிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை தஞ்சையில் வீட்டு பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு
திட்டை முத்துமாரியம்மன் கோயில் குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையில் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும்
கலெக்டரிடம் கிராம மக்கள் மனு மணல் திருட்டு வழக்கில் குண்டர் சட்டத்தில் வாலிபர் திருச்சி சிறையில் அடைப்பு
தஞ்சையில் மாணவிகள் பங்கேற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்