ஆற்றில் மாணவர்கள் இறக்கும் சம்பவம் தடுக்க கிராமசபை கூட்டஅழைப்பில் விழிப்புணர்வு வாசகம் கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை
9/30/2019 9:25:54 AM
வலங்கைமான், செப். 30: கிராம ஊராட்சிகளில் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கிராம ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துண்டு பிரசுரங்களில் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் மாணவர்கள் இறக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வாசகங்களை இடம்பெற செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கின்றது. மேலும் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் சில நிரம்பியுள்ளது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீர்நிலைகளில் குளிப்பதற்கு மற்றும் இதர பயன்பாடிற்கு இறங்கும்போது பரிதாபமாக இறந்து விடுகின்றனர். நீச்சல் தெரிந்த பெரியவர்கள் கூட ஆறுகளில் தவறி விழும்போது ஆறுகளில் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்ட பகுதிகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கிராம ஊராட்சி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்படுவது வழக்கம். அத்துண்டு பிரசுரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வாசகங்களை இடம்பெற செய்ய திருவாரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அம்மையப்பனில் பட்டா, மின்விளக்கு வசதி கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி 75 பேர் கைது
ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தினவிழா
கோயிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு தனி நபர் சுற்றுசுவர் கட்டுவதை கண்டித்து உண்ணாவிரதம்
திருத்துறைப்பூண்டியில் வி.சி கட்சி பொதுக்கூட்டம்
போலீசாரின் தடைகளை தகர்த்தெறிந்து திருவாரூரில் பூண்டிகலைவாணன் தலைமையில் டிராக்டர் பேரணி
நீடாமங்கலத்தில் கோழி வளர்ப்பில் மேலாண் நடைமுறை குறித்த பயிற்சி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!