கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் 22 ஆண்டாக தேடப்பட்டவர் விமான நிலையத்தில் கைது
9/20/2019 12:25:13 AM
சென்னை: நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக பணியாற்றியவர் தாமரை செல்வன் (55). இவர், பணியின்போது, போலியாக கையெழுத்து போட்டு, பண மோசடி செய்ததாக, நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கடந்த 1997ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், தாமரை செல்வனை கைது செய்து விசாரிக்க முடிவு செய்தபோது, அவர் தலைமறைவானார். கடந்த 22 ஆண்டுகளாக போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும், அவர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்ததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக எஸ்பி அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல தாமரை செல்வன் வந்தார். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என தெரிந்ததால், அவரை உடனே கைது செய்து தனி அறையில் அடைத்தனர். பின்னர், நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள், சென்னைக்கு விரைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த அமெரிக்க மாப்பிள்ளை சென்னையில் கைது
பெண்ணின் கன்னத்தை கடித்தவருக்கு வலை
திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம்: டி.ஆர்.பாலு தலைமையில் நடந்தது
குடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
கொத்தவால்சாவடியில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை: தயாநிதி மாறன் எம்பி தொடங்கி வைத்தார்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்