சாக்கோட்டை செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் விழா
9/17/2019 12:36:43 AM
கும்பகோணம், செப். 17: உலக ஓசோன் தினத்தையொட்டி கும்பகோணம் சாக்கோட்டை செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. மாதா கல்வி குழும இயக்குனர் மற்றும் தாளாளர் மரியசெல்வம் தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார். மாதா காதுகேளாதோர் பள்ளி தலைமை ஆசிரியை பிச்சை ஜோதிமணி மரியசெல்வம் மற்றும் செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் லதா சுரேஷ் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, வாகனங்களில் இருந்து வரும் புகை தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை மற்றும் கழிவுநீர் குளிர்பதன பெட்டியில் இருந்து வரும சிஎப்சி வாய்வு போன்ற காரணங்களால் ஓசோன் படலம் பாதிப்படைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒளி மற்றும் ஒலி அமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு அதன் விவரத்தை முதுகலை உயிரியல் ஆசிரியர் செந்தில் விளக்கினார். விழாவில் மாணவர்களுக்கு 2,500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
ஈரமான நெல்லை உலர்த்தும் நவீன இயந்திரம்
குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரம் விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி துவக்கம்
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
தஞ்சை விவசாயி புதிய முயற்சி மழையால் சேதமடைந்த நெல்லுக்கு தஞ்சை பகுதிகளில்
தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்