தொழிலாளி மீது தாக்குதல்
9/15/2019 5:07:04 AM
திருக்கோவிலூர், செப். 15: திருக்கோவிலூர் அருகே சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் மகன் முபாரக் (37). திருக்கோவிலூரில் உள்ள காய்கறி மண்டியில் வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஆறுமுகம் மகன் சுருளிகந்தசாமி என்பவருடன் சந்தப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சினிமா தியேட்டர் எதிரில் வண்டியை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் மகன் சதாம்உசேன் பீர்பாட்டிலால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அருகில் இருந்தவர் பிடிக்க முயன்றபோது சதாம்உசேன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த முபாரக் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முபாரக் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்கு பதிந்து தப்பியோடிய சதாம்உசேனை தேடி வருகிறார்.
மேலும் செய்திகள்
மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு
விசா முடிந்ததால் வெளிநாட்டை சேர்ந்தவர் கைது
சாலையில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகமாகி 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன அறுவடை செய்ய முடியாததால் விவசாயிகள் தவிப்பு நெல் மின் உலர்த்தி அமைக்கவும் கோரிக்கை
விழுப்புரம் அருகே பரபரப்பு விஷம் குடித்த பெண் சாவு கள்ளக்காதலன் கவலைக்கிடம் போலீசார் தீவிர விசாரணை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்