மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை
8/22/2019 1:48:06 AM
காங்கயம், ஆக. 22: வெள்ளகோவிலில் லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெள்ளகோவிலை சேர்ந்த 5ம் வகுப்பு படித்து வந்த தேவிபிரசாத் (10) என்ற மாணவன் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய, உடுமலை அடுத்த ஜல்லி பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (48) என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு பிரவீன்குமார் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் செய்திகள்
ராகுல்காந்தி இன்று ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோட்டில் 27 பேருக்கு கொரோனா
சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றம்
மாவட்டத்தில் 13 மையங்களில் இன்று ஊரக திறனாய்வு தேர்வு
அந்தியூரில் வி.சி.க. சார்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பெருந்துறை தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!