மயிலாடுதுறை நகரில் மதுக்கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்
8/22/2019 12:12:57 AM
மயிலாடுதுறை, ஆக.22: மயிலாடுதுறை நகரில் மதுக்கடைகளை அகற்றாவிட்டால் அக்.2 ம்தேதி போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் போராட்டக்குழு அறிவித்துள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம் மயிலாடுதுறை தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராமசேயோன் தலைமையில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், புகழரசன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவொளி மற்றும் வினோத், மக்கள் தொடர்பாளர்கள் சிவச்சந்திரன் மற்றும் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, ஆன்மீக நகரான மயிலாடுதுறையில் கூடுதல் மதுக்கடைகளை தொடர்ந்து திறந்துவரும் தமிழக அரசுக்கு இக்கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. உடனே மயிலாடுதுறை நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் தமிழக அரசு அகற்ற வேண்டும். அகற்ற தவறினால் காந்திஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி மாபெரும் போராட்டம் நடத்துவது. மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் உடனே அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது.காவிரி டெல்டா பகுதியில் நடுநகரமாக திகழும் மயிலாடுதுறையில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க மத்திய அரசுக்கு மயிலாடுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மூலமாக குறிப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச ஜெய்சங்கருக்கு கோரிக்கை மனு அளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
கொள்ளிடத்தில் தொடர் மழை ஆச்சாள்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சிவன் கோயில் குளம்
புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூத்தியம்பேட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையை சீரமைக்காத அவலம்
பொதுமக்கள் அவதி சாலை பாதுகாப்பு விழா
வாக்காளர் தின விழிப்புணர்வு தினத்தையொட்டி மகளிர் குழுவினருக்கு கோலப்போட்டி
ஆச்சாள்புரம் ஏழு பிடாரி கோயிலில் உண்டியலை திருட முயற்சி
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!