SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா வரும் 26, 27ல் நடக்கிறது

3/18/2023 5:54:06 AM

மதுரை, மார்ச் 18: மதுரையில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் வைகை இலக்கிய திருவிழா நடத்தப்படவுள்ளது என எம்.பி வெங்கடேசன் தெரிவித்தார். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் இணைந்து, வைகை இலக்கிய திருவிழாவை நடத்துகின்றன. மதுரையில் உள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தில் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும், இந்த விழாவை நடத்துவது தொடர்பாக, நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு, கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். சு.வெங்கடேசன் எம்.பி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின், வெங்கடேசன் எம்.பி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் இலக்கிய திருவிழாவை நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில், குறுணை இலக்கியத்திருவிழா, சிறுவாணி இலக்கியத்திருவிழா, காவிரி இலக்கிய திருவிழா, சென்னை இலக்கிய திருவிழா ஆகியவை நடந்து முடிந்துள்ளது. ஐந்தாவதாக வைகை இலக்கிய திருவிழா மதுரையில் நடைபெற உள்ளது. இந்த விழா இரண்டு நாட்கள் மூன்று அமர்வாக நடைபெறும். இதில், 60க்கு மேற்பட்ட ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். விழாவானது மதுரை, வைகை பற்றிய இலக்கியம், கவிதை, பாடல்கள், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெறும். இதனை தேசிய தமிழ் திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்