துறையூர் அருகே அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்
3/18/2023 5:46:25 AM
துறையூர், மார்ச் 18: துறையூர் அருகே அனுமதியின்றி அரளைக் கல் ஏற்றிச் சென்ற டிராக்டரை புவியியல் மற்றும் கனிம வளத்துறை தாசில்தார் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். திருச்சி புவியியல் மற்றும் கனிமங்கள் வளத் துறை தாசில்தார் ஜெயபிரகாஷ் தலைமையிலான அந்தத் துறை அதிகாரிகள் துறையூரை அடுத்த சொரத்தூர் பிரிவு ரோடு அருகே வாகனத் தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்குவாடியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் மகேஸ்வரன்(38) என்பவர் டிராக்டரில் அரளைக் கல் ஏற்றிச் சென்றார்.
அவரது வாகனத்தை புவியியல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மறித்து சோதனையிட்ட போது அதில் அரளைக் கற்களை அரசு அனுமதியின்றி எடுத்துச் செல்வது தெரிந்தது. உடனை டிராக்டரை பறிமுதல் செய்து துறையூர் போலீசில் தாசில்தார் ஜெயபிரகாஷ் ஒப்படைத்து புகார் அளித்தார். இதனையடுத்து துறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரனைக் கைது செய்ததுடன், அரளைக் கற்களுடன் இருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது
3வது வார பூச்சொரிதல் விழா சமயபுரம் கோயிலில் வாகனங்களில் சென்று மலரை குவித்த பக்தர்கள்
நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா
விருப்பம் உள்ளவர்கள் சேர அழைப்பு சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்கலாம் விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பேச்சு
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!