மழைநீர் வடிகால் கட்டுமான பணியால் ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்
3/18/2023 5:28:11 AM
சென்னை: மழைநீர் வடிகால் கட்டுமான பணி காரணமாக ஈ.வெ.ரா சாலையல் இன்று இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை அதிகாலை வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிப்பில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில், சுதா ஓட்டல் முன்பு (நாயர் மேம்பாலம் பாயின்ட் மற்றும் தாசபிரகாஷ் பாயின்ட் சந்திப்புக்கு இடையில்) நெடுஞ்சாலை துறையினர் இன்று இரவு 10 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று இரவு 10 மணி முதல் 20ம் தேதி (திங்கள் கிழமை) காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு: ஈ.வெ.ரா சாலையில் நாயர் மேம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம். ஈ.வெ.ரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து நாயர் மேம்பாலம் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் தாச பிரகாஷ் பாயின்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா அண்ணாமலை சாலை வழியாக சென்று அழகப்பா சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பா சாலை மறுபடியும் வலது புறம் திருப்பி நாயர் ேமம்பாலம் சந்திப்பு மற்றும் ஈ.வெ.ரா சாலை வழியாக செல்லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு தடுக்க கல் தூண் தடுப்புகள்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி
போலி ரசீது தயாரித்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
நந்தம்பாக்கம் பகுதியில் ரூ.26.94 கோடியில் பாதாள சாக்கடை பணி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
கூவம் ஆற்றுப்படுகை, மெரினாவில் ரூ.2.20 கோடியில் கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு
கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!