குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
10/1/2022 5:42:54 AM
குன்றத்தூர், அக். 1: குன்றத்தூரில் சட்ட விரோதமாக காரில் குட்கா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3000 கிலோ குட்கா மூட்டைகள் மற்றும் 4 கார்களை பறிமுதல் செய்தனர். குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளுக்கு வாகனங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, போதைபொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் நேற்று தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஷாலினி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் போலீசார் குன்றத்தூர் பிரதான சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.
இதில், அந்த காரில் பயணிகள் அமரும் இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதனைதொடர்ந்து காரில் வந்த கண்டிகையை சேர்ந்த சிராஜுதீன் (43), கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிமாறன் (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், பூந்தமல்லி அடுத்த கண்ணபாளையம் அருகே உள்ள தனியார் குடோனில் குட்கா மொத்தமாக பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.
குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு குடோனை திறந்து பார்த்தபோது, அதில் ₹50 லட்சம் மதிப்புள்ள, சுமார் 3000 கிலோ குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அங்கு குட்கா கடத்தலுக்கு பயன்படுத்த நிறுத்தி வைத்திருந்த 3 வாகனம் உள்ளிட்ட 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
மதுராந்தகம் பகுதியில் வேளாண் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்
சிறார் மன்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: தாம்பரம் கமிஷனர் வழங்கினார்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
சந்தோஷி கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்: டிஎஸ்பி பங்கேற்பு
பெரும்புதூரில் பூட்டியே கிடக்கும் ராமானுஜர் மணி மண்டபம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!