காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
10/1/2022 5:42:48 AM
ஸ்ரீபெரும்புதூர், அக். 1: காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஸ் சிலிண்டர் தீ விபத்து தொடர்பாக, ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவராக உள்ள அஜய்குமார், மனைவி சாந்தி, உரிமையாளர் ஜீவானந்தம், பொன்னிவளவன் மற்றும் மோகன் ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள், மீது அஜாக்கிரதையாக செயல்பட்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டது உள்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர் அஜய் குமார் நேற்று கைது செய்யபட்டார். இவர், சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக கடந்த 7 ஆண்டகளாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. இதனை பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த காஸ் ஏஜென்சியை வாங்கி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதில் தலைமறைவாக உள்ள மற்ற சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மதுராந்தகம் பகுதியில் வேளாண் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு
இ-சேவை மையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் தகவல்
சிறார் மன்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: தாம்பரம் கமிஷனர் வழங்கினார்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
சந்தோஷி கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்: டிஎஸ்பி பங்கேற்பு
பெரும்புதூரில் பூட்டியே கிடக்கும் ராமானுஜர் மணி மண்டபம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி