நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்
10/1/2022 5:40:27 AM
நெல்லிக்குப்பம், அக். 1: நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன் முன்னிலை வகித்தார். நகராட்சி மேலாளர் பார்த்திபன் வரவேற்றார். துப்புரவு அலுவலர் சக்திவேல், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன், கட்டிட ஆய்வாளர் ஜின்னா, விசிக நகர செயலாளர் திருமாறன், நகர பொருளாளர் காவியன், கவுன்சிலர் பன்னீர்செல்வம், நெல்லிக்குப்பம் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் கண்ணன் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, சுப்பிரமணியன், முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மெய்யழகன், நகர மக்களின் நலன் குறித்து பேசினார். நகராட்சி சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். நுகர்வோர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என கூறி, வெளியிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
கட்சியில் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது
பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் வெட்டி மிரட்டல்
பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது
கொலை செய்து புதைக்கப்பட்ட கல்லூரி மாணவனின் உடல் தோண்டி எடுப்பு
4 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சாவு கோட்டாட்சியர், போலீசார் விசாரணை
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!