புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்
10/1/2022 5:35:19 AM
கந்தர்வகோட்டை,அக்.1: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்படியும், கந்தர்வகோட்டை தாசில்தார் ராஜேஸ்வரி வழிகாட்டுதலின் பேரில் வருவாய் ஆய்வாளர் செல்வ சக்தியா தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு கவிதை போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் என நடைபெற்றன. இதில் எண்ணற்ற மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அவர்களது தனித்திறமையை எழுத்து மூலமும், பேச்சில் மூலமும், வரைதல் மூலமும் வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களை தேர்வு செய்வதில் தேர்வு குழுவினர் திணறினர். அந்த அளவிற்கு மாணவ -மாணவிகள் திறமையை வெளிக்காட்டி இருந்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் புதுநகர் ஊராட்சி மன்ற தலைவர் வினோதா முத்துகுமார், தலைமையாசிரியர் அண்ணாதுரை, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கறம்பக்குடி அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பென்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு
நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி?
குரும்பூண்டி ஊராட்சியில் 100 சதவீதம் குடிநீர் விநியோகம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!