நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
10/1/2022 5:30:12 AM
அரவக்குறிச்சி. அக்.1: பேரூராட்சி மற்றும் நகராட்சியைக் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு எம்பிசி கல்வி உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சிகளில் கிராமப்புற பகுதி அரசு பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்பட்ட பெண் குழந்தைகளுக்கு 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ரூ 500, ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ ஆயிரமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் எம்பிசி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கல்வி உதவித்தொகை பேரூராட்சி மற்றும் நகராட்சியில் அரசு பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை. ஏழைக் குழந்தைகளின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கிட பெற்றோர்களும், ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுகின்றனர். மேலும் கிராமப்புற பகுதிக்கு கல்வி உதவித்தொகை வழங்க, கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் கையொப்பமிட்டு படிவங்களை மிகவும் பிற்பட்டோர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கின்றனர். அவர்களுடைய கல்வி உதவித்தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் தலைமை ஆசிரியர்களால் செலுத்தப்படுகிறது.
இதனால் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதில் தாமத நிலை உருவாகிறது. அவ்வாறில்லாமல், நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கிலேயே கல்வித் தொகை செலுத்தப்பட்டால், ஏழை மாணவிக ளுக்கு உய நேரத்தில் தொகை சிடைத்து, அவர்களுக்கு பேருதவியா இருக்கம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருந்து மாணவிகளுக்கு அவர்கள் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை வரவு வைக்கவும், இதற்குரிய விண்ணப்பங்களையும் கணினி வழியில் பெறவும் உத்தரவிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
தாந்தோணிமலை பகுதியில் விஷ ஐந்துகளின் நடமாட்டம் காடுபோல் மண்டி கிடக்கும் முள்செடிகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!