கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
10/1/2022 5:29:58 AM
கரூா்,அக்.1: கரூர் மாநகராட்சி மூலமாக மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் துறை அதிகாரிகள் சார்பில் கரூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மாநகராட்சிக்கு சொந்தமான பாலம்மாள்புரம் நுண் உர செயலாக்க மையம் மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. கரூர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்க வைத்து அதனை உரமாக்கி விவசாயிகளுக்கு டிராக்டர் மூலம் அனுப்பி வைத்து விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படுகிறது இதுவரை மாநகராட்சி மூலம் சுமார் 5 டன் அளவிற்கு நுண்ணுயிர் கலவை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று பாலம்பாள்புரம் நுண் உர செயலாக்க மையத்தில் இருந்து விவசாயிகளுக்கு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் லட்சிய வர்மா, சுகாதார ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர் நேரடியாகச் சென்று வழங்கினர்.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
தாந்தோணிமலை பகுதியில் விஷ ஐந்துகளின் நடமாட்டம் காடுபோல் மண்டி கிடக்கும் முள்செடிகள்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!