₹50 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றம் ஆரணி நகரமன்ற கூட்டத்தில்
10/1/2022 5:25:28 AM
ஆரணி, அக்.1: ஆரணி நகராட்சியில் உள்ள அறிஞர் அண்ணா மன்ற வளாகத்தில் நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு, பொறியாளர் ராஜவிஜயகாமராஜ், மேலாளர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, நகரமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நகராட்சிக்குட்பட்ட தர்மராஜா கோயில் தெருவில் பக்ககால்வாய் அமைத்தல், பழுதடைந்த சாலை சிரமைத்தல், பள்ளி நகராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் மேற்கூரை அமைத்தல், சிமெண்ட் தரை அமைத்தல், கழிவறை கட்டுதல், ஆரணி டவுன் பழைய, புதிய பஸ்நிலையங்களில் உயர்மின் கோபுர மின்விளக்கு, பயணிகள் இருக்கை, குடிநீர், கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் மற்றும் பேருந்து கால அட்டவணை பலகை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் என மொத்தம் ₹50 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
ஆறுமுகம், அஜித்குமார், தங்கவேலு. அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலையில் விடுமுறை தினமான நேற்று
சாத்தனூர் அணையில் இருந்து திறந்த தண்ணீர் கெலமஞ்சனூர் பிக்கப் அணைக்கட்டு வழியாக தென்பெண்ணை ஆற்றில் விவசாயத்திற்கு பெருக்கெடுத்து ஓடுகிறது. தொழிலாளியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள் சென்னையில் கைது
(தி.மலை) ஏரி, கிணறுகளின் நீர்மட்டம் உயர்வு கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில்
கீழ்பென்னாத்தூர் அருகே முன்விரோதத்தில் பயங்கரம் மண்வெட்டியால் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
பயன்படாத காஸ் சிலிண்டரில் கோயில் உண்டியல் வடிவமைப்பு பொதுமக்கள் பாராட்டு கண்ணமங்கலம் அருகே இளைஞர்கள் சிந்தனை
(தி.மலை) அரசு கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை மண்டல அளவிலான தடகளப் போட்டியில்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி